Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமொழியான்

நானும் கருத்து சொல்லிக்கிறேனே!

எத்தனை விதங்களில் மனிதர்கள்?!

&posturl=http://thirumozhian.blogspot.com/2006/09/blog-post_115832145181440678.html&cmt=0&blogurl=http://thirumozhian.blogspot.com/&photo=">

அனைவருக்கும் எனது வணக்கம்,

இது எனது முதல் பதிப்பு.
வலை மூலம் நம்மை ஒன்றிணைத்த தமிழ் மணத்துக்கு எனது உளங்கனிந்த நன்றி.

எனக்கு ஒரு 17 வயது இருக்கும். அப்போது நமது சென்னைத்தொலைக்காட்சியில் (தற்போதைய பொதிகைத் தொலைக்காட்சி) வரும் இந்தப் பாடல் எந்தவொரு காரணமும் இன்றி அப்போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை எழுதிய கவிஞர் பஞ்சு அருணாச்சலம் என்று நினைக்கிறேன். இசை அமைப்பாளர் யார் என்பது மறந்துவிட்டது. சின்னக்குயில் சித்ரா அவர்கள் பாடிய இந்தப்பாடலை இன்றும் நான் முனுமுனுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்து, பழகி ஓரளவு உலகஞானம் பெற்ற பின்பு இந்தப் பாடலின் பொருளும் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதமும் பொருந்தி வருவதையும், கவிஞரின் மனக்குமுறலையும் அறிந்தேன். இதோ அந்தப் பாடல் வலைஞர்களுக்காக.

எத்தனை விதங்களில் மனிதர்கள்
எத்தனை நிறங்களில் மனிதர்கள்
என்னென்ன ரகங்கள் என்னென்ன குணங்கள்
அத்தனை விசித்திர மனிதர்கள்

நேரில் பார்த்தால் சிரிக்கிறார் - அந்த
சிரிப்பு தான் நிஜமா?
நேசத்தோடு அணைக்கிறார் - அந்த
அணைப்பு தான் நிஜமா?
பேசும் வார்த்தை நல்ல வார்த்தை போகட்டும் பழகு
நல்லவனாய் நீ உள்ளவரை
ஒரு சஞ்சலம் உனக்கேது?

(எத்தனை....)

உறவைச் சொல்லி வருகிறார் - அந்த
உரிமை தான் பெரிது
மறைந்து நின்று எதிர்க்கிறார் - தினம்
மயங்கலாம் மனது
மோதிப் பார்த்தால் சேதமாகும் வாழட்டும் உறவு
மௌனத்தினால் பகை வெல்வது தான் இங்கு உத்தமர் வரலாறு

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு