Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமொழியான்

நானும் கருத்து சொல்லிக்கிறேனே!

தமிழன் சினிமாவின் பின்னாலா?

&posturl=http://thirumozhian.blogspot.com/2006/09/blog-post_115832321192130594.html&cmt=1&blogurl=http://thirumozhian.blogspot.com/&photo=">

வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்தவர்களில் நானும் ஒருவன். பொதுவாக வெளிமாநிலக்காரர்களுக்கு ஒரு அபிப்பிராயம். அதாவது தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் சினிமாவைக்கட்டி அழுபவர்கள், சினிமாவுக்குத் தேவையற்ற அல்லது அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று.

எனது அலுவலகத் தோழர்கள் அடிக்கடி இந்தக்கருத்தினை முன்னிறுத்தி அவர்களுக்குள்ளாகப் பேசிகொள்ளுவார்கள். நான் கண்டும் காணாதது போல் இருந்துவிடுவேன். ஆனால் ஒருமுறை எனக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட்டது (தமிழ் ரத்தம் சூடேறிக் கொதித்துவிட்டது!). கோபத்தில் நான் அவர்களிடம் சொன்னதன் சாராம்சம் இங்கே.

அண்ணாத்துரையோ, கருணாநிதியோ எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ, அல்லது விஜயகாந்தோ ஒரு இரவில் அரசியலில் நுழைந்து மறுநாள் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகவில்லை. (ஹேமாமாலினி மற்றும் சிலரைப் போல! (அவரும் ஒரு தமிழரே)).
1980-களில் வந்த ஒரு குமுதம் அந்தக்கால சினிமா ரசிகர்களை பற்றிய கருத்துக்கணிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களில் 47% சிவாஜி ரசிகர்கள் என்றும், 45% எம்ஜிஆர் ரசிகர்கள் என்றும் மற்ற நடிகர்களுக்கு எஞ்சிய 3% ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது. ஆனால், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தார்; நாம் அவரைத் தேர்ந்தெடுத்தோம்; சிவாஜி (பின்னாளில்) கட்சி ஆரம்பித்தார்; அவரை முழுவதுமாக நிராகரித்தோம் (கையைச் சுட்டுக்கொண்டதால், அவர் தனது கட்சியைக்கலைத்தும் விட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்).

இப்போது சமீபத்தில் ரஜினியின் வாய்ஸ் என்ன ஆனது என்பதை நான் உங்களுக்குச்சொல்ல வேண்டியதே இல்லை (ரஜினி ரசிகர்களே, பொறுத்தருள்வீர்).

செய்தி என்னவெனில், தமிழர்களுக்கு யாரை எடுப்பது யாரை விடுப்பது என்று நன்றாகத்தெரியும்.

சுதந்திரம் அடைந்தபின் அமைந்த மத்திய அரசுகளில் இடம்பெற்றவர்களில் அநேகம் பேர் வட மாநிலத்தவர்களே. ஆனால் பீஹார், ஹரியானா போன்ற மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எழுத்தறிவு எல்லாம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பின்தங்கியே உள்ளன.

சினிமாக்காரர்களை அவ்வளவாக மதிக்காத கேரளமும் மேற்கு வங்காளமும் தமிழகத்தை விடச் சொல்லிக்கொள்ளும்படியாகப் பெரிதாக ஒன்றும் முன்னேறிவிடவில்லை.

யார் நம்மை ஆண்டாலும் முன்னெற்றமும் தாழ்வும் நம் கையில் தான் உள்ளது என்பதை நாம் மிகவும் நன்றாக அறிவோம்.

1 மறுமொழிகள்:

Blogger ஆவி அம்மணி said...

//யார் நம்மை ஆண்டாலும் முன்னெற்றமும் தாழ்வும் நம் கையில் தான் உள்ளது என்பதை நாம் மிகவும் நன்றாக அறிவோம். //

ஆமாம். உண்மை!

5:55 AM  

Post a Comment

<< முகப்பு