Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமொழியான்

நானும் கருத்து சொல்லிக்கிறேனே!

உடன்பிறவாக் குண்டுகள்

&posturl=http://thirumozhian.blogspot.com/2006/09/blog-post_115864138972373710.html&cmt=0&blogurl=http://thirumozhian.blogspot.com/&photo=">

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு லாரியில் அனுப்பபட்ட 600 ராக்கெட் குண்டுகளை ஆந்திரப்போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுகள் யாரால் யாருக்காக மற்றும் எதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன போன்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இது பற்றி அரசியல் தலைவர்கள் என்ன கருத்துக்களைச் சொல்லுவார்கள் என்று கற்பனை குதிரையைக் கேட்ட போது:

கருணாநிதி:
சில நாட்களுக்கு முன் தேச விரோத சக்தி ஒன்று நாட்டைத்துண்டாட எண்ணம் கொண்டு ஆயுதம் ஏந்தியும் போரிடத் தயார் என்று முழங்கிற்று. அதற்கும் இந்தக் குண்டுகளுக்கும் மற்றும் வேறு ஏதாவது 'உடன்பிறவா குண்டுகளுக்கும்' தொடர்பிருக்கிறதா என்று எனது திமுக தலைமையிலான மெஜாரிடி அரசு சகோதர பாசத்தைத் துறந்துவிட்டு ஆராய்ந்து வருகிறது.

ஜெயலலிதா:
இன்னும் சில நாட்களில் நான் ஐதராபாத் சென்று ஓய்வு எடுக்கப்போவதைத் தனது உளவுத்துறைப் போலீசார் மூலம் தெரிந்துகொண்ட கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் என்னைக் கொல்வதற்காக அனுப்பி வைத்த குண்டுகளே ஆந்திரப் போலீஸார் கைப்பற்றியவை. இன்னும் சில நாட்களில் தனது மைனாரிடி திமுக ஆட்சி கவிழ்ந்துு அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்பதைதெரிந்து கொண்ட கருணாநிதி நான் மீண்டும் முதலமைச்சாராகிவிடக் கூடாது என்பதற்காகச் செய்த சூழ்ச்சியே அந்தக்குண்டுகள். அந்தக்குண்டுகளை பன்னீர்ச்செல்வத்தின் வீட்டிலிருந்து கைப்பற்றியதாக பத்திரிக்கைகளுக்குச் செய்தி தருமாறு டெல்லியிலிருந்து தயாநிதி மாறனும் சிதம்பரமும் கருணநிதியிடம் கூறியிருப்பதால் தமிழக மக்களை 'நமது எம்ஜிஆர்' நாளேட்டினைப் படித்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

வைகோ:
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தயாநிதிமாறன் தலைமையிலான கூட்டம் ஒன்று என்னைக்கொல்லக் கூலிப்படையாம் குண்டர் படையை ஏவியிருக்கிறது என்று கூறினேன். தனது திட்டம் அம்பலமாகிவிட்டது தெரிந்த அந்தக்கூட்டம் இப்போது குண்டர்களுக்குப் பதிலாக குண்டுகளை ஏவிப்பார்க்க நினைக்கிறது. இந்த மறத்தமிழன் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டான். நேருக்கு நேர் ஆண்மகனாக வந்தால் குண்டுகளை மார்பில் தாங்கித் தமிழரின் மானம் காப்பேன். இந்தக்குண்டுகளை எனது செங்குருதி சிந்தியாவது ஈழம் சென்று சேர்ப்பேன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு