Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமொழியான்

நானும் கருத்து சொல்லிக்கிறேனே!

மறைந்து உள்ள செய்தி : எதிர் காற்று

&posturl=http://thirumozhian.blogspot.com/2006/09/blog-post_21.html&cmt=1&blogurl=http://thirumozhian.blogspot.com/&photo=">

சற்றே நிதானித்துச் சிந்தியுங்கள். தில்லிப் பணக்காரர்களுக்குப் பொதுவாகவே ஓர் அசைக்க முடியாத எண்ணம், அதாவது பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பது.
உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று மட்டும் கூறுகிறேன். டெல்லி ஜல் போர்டு (தில்லித் தண்ணீர் வாரியம்) வழங்கும் குடிநீரில் 45 சதவீதம் களவு போகிறது. தில்லிப்பணக்காரர்களின் குலத்தொழில்களில் ஒன்று அடுக்குமாடி வீடு கட்டி வாடகைக்கு விடுவது அல்லது தனது வீட்டிலேயே மாடி மேல் மாடி கட்டி வாடகைக்கு விடுவது. இதற்காக இவர்கள் களவாடும் தண்ணீரே அந்த 45%.

அதுமட்டுமல்ல, பொதுவாகவே, தில்லி மக்களிடம் ஒரு வகையான காட்டுமிராண்டி கலாச்சாரத்தைக் காணலாம். அங்கிங்கெனாதபடி எங்கும் துப்புதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், போலீசிடம் மரியாதை இன்றிப் பேசுதல், பேருந்துகளில் பயணச்சீட்டு எடுக்காவிட்டாலும் அதைப்பற்றி எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாதிருத்தல் போன்றவை சில உதாரணங்கள்.

இதில் பணக்காரர்கள் செய்யும் குற்றங்கள் தனிரகம். ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகளைக்கட்டுவது, லஞ்சம் தாராளமாகக் கொடுப்பது, எங்கெங்கு தேவையோ அங்கங்கெல்லம் அரசியல்வாதிகளின் பெயரை உபயோகிப்பது, வாடகை வாங்குவதைப் பெருமளவு மறைப்பது, தான் மாடியில் குடியிருந்துகொண்டு கீழ் போர்ஷனைக் கடைகளுக்கு வாடகைக்கு விடுவது போன்றவை சில உதாரணங்கள்.

இப்போது பற்றி எரியும் கடைகள் இடிப்புப் பிரச்சினை என்பது கடைசியாகச் சொல்லப்பட்ட உதாரணத்தால் தான். லாஜ்பத்நகர் போன்ற பகுதிகளில் அகதிகளாக வந்து அரசிடமிருந்து வீடுகள் பெற்றவர்கள் பலர். இவர்கள் வணிக நோக்கத்துடன் தங்களது குடியிருப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் தங்களது குடியிருப்புகளைக் கடைகளுக்காக வாடகைக்கு விட்ட இவர்கள் அதில் வரும் லாபத்தைப் பார்த்துப் பின் தாங்களே தொழில் தொடங்கிக் கடைகளை ஆரம்பித்தார்கள். அவ்வாறு தோன்றியவையே டெல்லியின் பெரும்பாலான மார்க்கெட்டுகள்.

நீதிமன்றம் இடிக்க ஆணையிட்டதும் இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளில் உண்டாக்கப்பட்ட வணிக வளாகங்களே. மாநகராட்சி சிறுக சிறுகச் செய்த தவறுகள் தற்போது பூதாகாரமாக எழுந்து அவர்களையே மிரட்டுகிறது. கண்துடைப்பு ஆக்கிரமிப்பு நாடகங்களை நடத்தி நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்துப் பின் நீதிமன்றத்திடமிருந்து சரியான குட்டும் வாங்கியது.அதன் பிறகு வேறு வழியில்லாமல் சில மாநகராட்சிப் பொறியாளர்கள் மீது பணி இடைநீக்கம், பதவி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது.

நீதிமன்றம் கடுமை காட்டியதும் தற்போது மீண்டும் தான் லஞ்சம் வாங்கிகொண்டு அனுமதி அளித்த கட்டிடங்களையே இடிக்கப் புறப்பட்டுவிட்டது.

உண்மைகள்:

1. 2010-ல் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லி நகரம் சிலவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அவ்வாறு செய்யாவிடில் ஒருவேளை காமன்வெல்த் போட்டிகள் ரத்தாகலாம். அது தேசத்துக்கு அவமானம். (இல்லாவிட்டால் இவ்வளவு வருடங்களாக இயங்கிவந்த மார்க்கெட்டுகளை இப்போது இடிக்க என்ன அவசியம் வந்தது?)

2. நேரடியாக அறிவிக்க முடியாவிடில் அரசியல்வாதிகள் கோர்ட் மூலமாகச் செய்து விடுவார்கள் (உதாரணம்: வாகனங்களில் பெட்ரோலுக்குப் பதிலாக சி.என்.ஜி (இயற்கை எரிவாயு) பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி கோர்ட் சில வருடங்களுக்கு முன் அளித்த தீர்ப்பு)

3.லஞ்சம் என்னும் மலத்தை உண்டுவிட்டு அரசு ஊழியர்கள் நாம் விரும்பியதைச் செய்து கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் அந்த மலம் நம் முகத்திலேயே மீண்டும் வந்து விழும்போது உத்தமன் போல ஆர்ப்பட்டம் போராட்டம் எல்லாம் பண்ணக்கூடாது.