Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

திருமொழியான்

நானும் கருத்து சொல்லிக்கிறேனே!

மறைந்து உள்ள செய்தி : எதிர் காற்று

சற்றே நிதானித்துச் சிந்தியுங்கள். தில்லிப் பணக்காரர்களுக்குப் பொதுவாகவே ஓர் அசைக்க முடியாத எண்ணம், அதாவது பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பது.
உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று மட்டும் கூறுகிறேன். டெல்லி ஜல் போர்டு (தில்லித் தண்ணீர் வாரியம்) வழங்கும் குடிநீரில் 45 சதவீதம் களவு போகிறது. தில்லிப்பணக்காரர்களின் குலத்தொழில்களில் ஒன்று அடுக்குமாடி வீடு கட்டி வாடகைக்கு விடுவது அல்லது தனது வீட்டிலேயே மாடி மேல் மாடி கட்டி வாடகைக்கு விடுவது. இதற்காக இவர்கள் களவாடும் தண்ணீரே அந்த 45%.

அதுமட்டுமல்ல, பொதுவாகவே, தில்லி மக்களிடம் ஒரு வகையான காட்டுமிராண்டி கலாச்சாரத்தைக் காணலாம். அங்கிங்கெனாதபடி எங்கும் துப்புதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், போலீசிடம் மரியாதை இன்றிப் பேசுதல், பேருந்துகளில் பயணச்சீட்டு எடுக்காவிட்டாலும் அதைப்பற்றி எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாதிருத்தல் போன்றவை சில உதாரணங்கள்.

இதில் பணக்காரர்கள் செய்யும் குற்றங்கள் தனிரகம். ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகளைக்கட்டுவது, லஞ்சம் தாராளமாகக் கொடுப்பது, எங்கெங்கு தேவையோ அங்கங்கெல்லம் அரசியல்வாதிகளின் பெயரை உபயோகிப்பது, வாடகை வாங்குவதைப் பெருமளவு மறைப்பது, தான் மாடியில் குடியிருந்துகொண்டு கீழ் போர்ஷனைக் கடைகளுக்கு வாடகைக்கு விடுவது போன்றவை சில உதாரணங்கள்.

இப்போது பற்றி எரியும் கடைகள் இடிப்புப் பிரச்சினை என்பது கடைசியாகச் சொல்லப்பட்ட உதாரணத்தால் தான். லாஜ்பத்நகர் போன்ற பகுதிகளில் அகதிகளாக வந்து அரசிடமிருந்து வீடுகள் பெற்றவர்கள் பலர். இவர்கள் வணிக நோக்கத்துடன் தங்களது குடியிருப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் தங்களது குடியிருப்புகளைக் கடைகளுக்காக வாடகைக்கு விட்ட இவர்கள் அதில் வரும் லாபத்தைப் பார்த்துப் பின் தாங்களே தொழில் தொடங்கிக் கடைகளை ஆரம்பித்தார்கள். அவ்வாறு தோன்றியவையே டெல்லியின் பெரும்பாலான மார்க்கெட்டுகள்.

நீதிமன்றம் இடிக்க ஆணையிட்டதும் இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளில் உண்டாக்கப்பட்ட வணிக வளாகங்களே. மாநகராட்சி சிறுக சிறுகச் செய்த தவறுகள் தற்போது பூதாகாரமாக எழுந்து அவர்களையே மிரட்டுகிறது. கண்துடைப்பு ஆக்கிரமிப்பு நாடகங்களை நடத்தி நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்துப் பின் நீதிமன்றத்திடமிருந்து சரியான குட்டும் வாங்கியது.அதன் பிறகு வேறு வழியில்லாமல் சில மாநகராட்சிப் பொறியாளர்கள் மீது பணி இடைநீக்கம், பதவி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுத்தது.

நீதிமன்றம் கடுமை காட்டியதும் தற்போது மீண்டும் தான் லஞ்சம் வாங்கிகொண்டு அனுமதி அளித்த கட்டிடங்களையே இடிக்கப் புறப்பட்டுவிட்டது.

உண்மைகள்:

1. 2010-ல் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லி நகரம் சிலவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அவ்வாறு செய்யாவிடில் ஒருவேளை காமன்வெல்த் போட்டிகள் ரத்தாகலாம். அது தேசத்துக்கு அவமானம். (இல்லாவிட்டால் இவ்வளவு வருடங்களாக இயங்கிவந்த மார்க்கெட்டுகளை இப்போது இடிக்க என்ன அவசியம் வந்தது?)

2. நேரடியாக அறிவிக்க முடியாவிடில் அரசியல்வாதிகள் கோர்ட் மூலமாகச் செய்து விடுவார்கள் (உதாரணம்: வாகனங்களில் பெட்ரோலுக்குப் பதிலாக சி.என்.ஜி (இயற்கை எரிவாயு) பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி கோர்ட் சில வருடங்களுக்கு முன் அளித்த தீர்ப்பு)

3.லஞ்சம் என்னும் மலத்தை உண்டுவிட்டு அரசு ஊழியர்கள் நாம் விரும்பியதைச் செய்து கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் அந்த மலம் நம் முகத்திலேயே மீண்டும் வந்து விழும்போது உத்தமன் போல ஆர்ப்பட்டம் போராட்டம் எல்லாம் பண்ணக்கூடாது.

தில்லி போலீசின் லட்சணம்!

ஆள்வோரின் அடிவருடிகளாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் தில்லிப் போலீசார். பொதுமக்களுடனான தில்லிப் போலீசாரின் சட்டாம்பிள்ளைத் தனமான போக்கு நாம் நன்கறிந்ததே. அரியானாக்காரர்கள் அதிகமாகக் காவல்துறையில் இருப்பது இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. குர்காவ்னில் அரியாணா போலீஸ்காரர்கள் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதமே இதற்குச் சாட்சி. (கொலை கொள்ளைக்காரர்களிலும் அரியானாக்காரர்களின் சதவீதம் அதிகமைய்யா!)

அரசியல்வாதிகளிடம் நயமாக நடந்துகொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தில்லி காவல்துறைக்கு ஒரு சுற்றறிக்கை வந்திருக்கிறது. அதை நூறு சதவீதம் தலை வணங்கி ஏற்றுக்கொள்ளும் தில்லிப் போலீசார் அரசியல்வாதிகள் பொதுமக்களின் ரெப்ரெசென்டேட்டிவ்கள் என்று வேறு சப்பைக்கட்டுக் கட்டிஇருக்கிறார்கள். இதுவரை தில்லிப் பணக்காரர்களின் கறுப்புத்தொழில்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்துவரும் தில்லிப் போலீசார் (ஆதாரம் : கண்துடைப்பு ஆக்கிரமிப்பு இடிப்புகளும் தில்லி நீதிமன்றம் அதுபற்றி வெளியிட்ட அதிருப்தியும். என்னதான் மாநகராட்சி காரணமென்றாலும், காவல்துறையின் முழு ஒத்துழைப்பு அனைத்து அட்டூழியங்களிலும் உண்டு. ), இனி முன்னைவிட நன்றாக அரசியல்வாதிகளுக்கு முதுகு சொறிந்துவிடப் போகிறார்கள்.

தில்லித் தனியார் பேருந்துகளில் இரண்டு ரூபாய்க்கு டிக்கட் எடுக்க வக்கில்லாது "முஜே மந்த்ரி பதா ஹே" (எனக்கு மந்திரியைத் தெரியும்) என்று கண்டக்டரை மிரட்டும் சல்லித்தனமானவன் இனித் தன் குரலை ஓங்கி ஒலிக்கப் போகிறான்.

ஹ்ம்ம்ம். என்னத்தச் சொல்றது.
யாருக்கும் வெட்கமில்லை!

உடன்பிறவாக் குண்டுகள்

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு லாரியில் அனுப்பபட்ட 600 ராக்கெட் குண்டுகளை ஆந்திரப்போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுகள் யாரால் யாருக்காக மற்றும் எதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன போன்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இது பற்றி அரசியல் தலைவர்கள் என்ன கருத்துக்களைச் சொல்லுவார்கள் என்று கற்பனை குதிரையைக் கேட்ட போது:

கருணாநிதி:
சில நாட்களுக்கு முன் தேச விரோத சக்தி ஒன்று நாட்டைத்துண்டாட எண்ணம் கொண்டு ஆயுதம் ஏந்தியும் போரிடத் தயார் என்று முழங்கிற்று. அதற்கும் இந்தக் குண்டுகளுக்கும் மற்றும் வேறு ஏதாவது 'உடன்பிறவா குண்டுகளுக்கும்' தொடர்பிருக்கிறதா என்று எனது திமுக தலைமையிலான மெஜாரிடி அரசு சகோதர பாசத்தைத் துறந்துவிட்டு ஆராய்ந்து வருகிறது.

ஜெயலலிதா:
இன்னும் சில நாட்களில் நான் ஐதராபாத் சென்று ஓய்வு எடுக்கப்போவதைத் தனது உளவுத்துறைப் போலீசார் மூலம் தெரிந்துகொண்ட கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் என்னைக் கொல்வதற்காக அனுப்பி வைத்த குண்டுகளே ஆந்திரப் போலீஸார் கைப்பற்றியவை. இன்னும் சில நாட்களில் தனது மைனாரிடி திமுக ஆட்சி கவிழ்ந்துு அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்பதைதெரிந்து கொண்ட கருணாநிதி நான் மீண்டும் முதலமைச்சாராகிவிடக் கூடாது என்பதற்காகச் செய்த சூழ்ச்சியே அந்தக்குண்டுகள். அந்தக்குண்டுகளை பன்னீர்ச்செல்வத்தின் வீட்டிலிருந்து கைப்பற்றியதாக பத்திரிக்கைகளுக்குச் செய்தி தருமாறு டெல்லியிலிருந்து தயாநிதி மாறனும் சிதம்பரமும் கருணநிதியிடம் கூறியிருப்பதால் தமிழக மக்களை 'நமது எம்ஜிஆர்' நாளேட்டினைப் படித்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

வைகோ:
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தயாநிதிமாறன் தலைமையிலான கூட்டம் ஒன்று என்னைக்கொல்லக் கூலிப்படையாம் குண்டர் படையை ஏவியிருக்கிறது என்று கூறினேன். தனது திட்டம் அம்பலமாகிவிட்டது தெரிந்த அந்தக்கூட்டம் இப்போது குண்டர்களுக்குப் பதிலாக குண்டுகளை ஏவிப்பார்க்க நினைக்கிறது. இந்த மறத்தமிழன் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டான். நேருக்கு நேர் ஆண்மகனாக வந்தால் குண்டுகளை மார்பில் தாங்கித் தமிழரின் மானம் காப்பேன். இந்தக்குண்டுகளை எனது செங்குருதி சிந்தியாவது ஈழம் சென்று சேர்ப்பேன்.

தமிழன் சினிமாவின் பின்னாலா?

வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்தவர்களில் நானும் ஒருவன். பொதுவாக வெளிமாநிலக்காரர்களுக்கு ஒரு அபிப்பிராயம். அதாவது தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் சினிமாவைக்கட்டி அழுபவர்கள், சினிமாவுக்குத் தேவையற்ற அல்லது அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று.

எனது அலுவலகத் தோழர்கள் அடிக்கடி இந்தக்கருத்தினை முன்னிறுத்தி அவர்களுக்குள்ளாகப் பேசிகொள்ளுவார்கள். நான் கண்டும் காணாதது போல் இருந்துவிடுவேன். ஆனால் ஒருமுறை எனக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட்டது (தமிழ் ரத்தம் சூடேறிக் கொதித்துவிட்டது!). கோபத்தில் நான் அவர்களிடம் சொன்னதன் சாராம்சம் இங்கே.

அண்ணாத்துரையோ, கருணாநிதியோ எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ, அல்லது விஜயகாந்தோ ஒரு இரவில் அரசியலில் நுழைந்து மறுநாள் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகவில்லை. (ஹேமாமாலினி மற்றும் சிலரைப் போல! (அவரும் ஒரு தமிழரே)).
1980-களில் வந்த ஒரு குமுதம் அந்தக்கால சினிமா ரசிகர்களை பற்றிய கருத்துக்கணிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களில் 47% சிவாஜி ரசிகர்கள் என்றும், 45% எம்ஜிஆர் ரசிகர்கள் என்றும் மற்ற நடிகர்களுக்கு எஞ்சிய 3% ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது. ஆனால், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தார்; நாம் அவரைத் தேர்ந்தெடுத்தோம்; சிவாஜி (பின்னாளில்) கட்சி ஆரம்பித்தார்; அவரை முழுவதுமாக நிராகரித்தோம் (கையைச் சுட்டுக்கொண்டதால், அவர் தனது கட்சியைக்கலைத்தும் விட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்).

இப்போது சமீபத்தில் ரஜினியின் வாய்ஸ் என்ன ஆனது என்பதை நான் உங்களுக்குச்சொல்ல வேண்டியதே இல்லை (ரஜினி ரசிகர்களே, பொறுத்தருள்வீர்).

செய்தி என்னவெனில், தமிழர்களுக்கு யாரை எடுப்பது யாரை விடுப்பது என்று நன்றாகத்தெரியும்.

சுதந்திரம் அடைந்தபின் அமைந்த மத்திய அரசுகளில் இடம்பெற்றவர்களில் அநேகம் பேர் வட மாநிலத்தவர்களே. ஆனால் பீஹார், ஹரியானா போன்ற மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எழுத்தறிவு எல்லாம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பின்தங்கியே உள்ளன.

சினிமாக்காரர்களை அவ்வளவாக மதிக்காத கேரளமும் மேற்கு வங்காளமும் தமிழகத்தை விடச் சொல்லிக்கொள்ளும்படியாகப் பெரிதாக ஒன்றும் முன்னேறிவிடவில்லை.

யார் நம்மை ஆண்டாலும் முன்னெற்றமும் தாழ்வும் நம் கையில் தான் உள்ளது என்பதை நாம் மிகவும் நன்றாக அறிவோம்.

எத்தனை விதங்களில் மனிதர்கள்?!

அனைவருக்கும் எனது வணக்கம்,

இது எனது முதல் பதிப்பு.
வலை மூலம் நம்மை ஒன்றிணைத்த தமிழ் மணத்துக்கு எனது உளங்கனிந்த நன்றி.

எனக்கு ஒரு 17 வயது இருக்கும். அப்போது நமது சென்னைத்தொலைக்காட்சியில் (தற்போதைய பொதிகைத் தொலைக்காட்சி) வரும் இந்தப் பாடல் எந்தவொரு காரணமும் இன்றி அப்போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை எழுதிய கவிஞர் பஞ்சு அருணாச்சலம் என்று நினைக்கிறேன். இசை அமைப்பாளர் யார் என்பது மறந்துவிட்டது. சின்னக்குயில் சித்ரா அவர்கள் பாடிய இந்தப்பாடலை இன்றும் நான் முனுமுனுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்து, பழகி ஓரளவு உலகஞானம் பெற்ற பின்பு இந்தப் பாடலின் பொருளும் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதமும் பொருந்தி வருவதையும், கவிஞரின் மனக்குமுறலையும் அறிந்தேன். இதோ அந்தப் பாடல் வலைஞர்களுக்காக.

எத்தனை விதங்களில் மனிதர்கள்
எத்தனை நிறங்களில் மனிதர்கள்
என்னென்ன ரகங்கள் என்னென்ன குணங்கள்
அத்தனை விசித்திர மனிதர்கள்

நேரில் பார்த்தால் சிரிக்கிறார் - அந்த
சிரிப்பு தான் நிஜமா?
நேசத்தோடு அணைக்கிறார் - அந்த
அணைப்பு தான் நிஜமா?
பேசும் வார்த்தை நல்ல வார்த்தை போகட்டும் பழகு
நல்லவனாய் நீ உள்ளவரை
ஒரு சஞ்சலம் உனக்கேது?

(எத்தனை....)

உறவைச் சொல்லி வருகிறார் - அந்த
உரிமை தான் பெரிது
மறைந்து நின்று எதிர்க்கிறார் - தினம்
மயங்கலாம் மனது
மோதிப் பார்த்தால் சேதமாகும் வாழட்டும் உறவு
மௌனத்தினால் பகை வெல்வது தான் இங்கு உத்தமர் வரலாறு